Thursday 30 June 2016

இசையோடு கலந்த இன்ப வெள்ளம் - ஆலத்தூர் சகோதரர்கள்



விரும்பிக்கேட்ட கச்சேரி.  திரும்பக் கேட்ட கச்சேரி- 26th ஜூன் 2௦16
எஸ் எல் நரசிம்மன் அவர்கள் concertopedia என்ற அமைப்பின் மூலம் அந்த காலத்து கர்நாடக இசைப் பாடகர்களின் கச்சேரியை, ஒரு ஹால் வாடைக்கும் எடுத்து, மெனக்கட்டு எல்லாருக்கும் இ-மெயில் மூலமாக தெரிவித்து, ஒரு ஆடியோ சிஸ்டம் அமைத்து, ஆப்பிள் LAPTOP கொண்டு வைத்துக்கொண்டு, அழகாக நடத்தி வருகிறார்.  ARKAY CONVENTION அரங்கத்தில் சத்தான சுமார் நாற்பது பேர்கள் அமர்ந்திருக்க ஒரு அருமையான கச்சேரியில் மனது கரைந்தது என்பது என்னமோ உண்மை தான்.
இந்த காலத்து தொழில் நுட்பம் அவருக்கு கை கொடுக்க, அந்த காலத்து கச்சேரிகளை தூசி தட்டி அனாவசியமான ஒலிகளை அகற்றி “லட்டு” மாதிரி காதுக்கு இனிமையாக தருகிறார். அந்தக்காலத்தில், இந்த கச்சேரிகளை நேரில் கேட்டவர்கள் இந்த CLARITY யுடன் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

இதற்காகவே அவருடைய தொப்பியில் ஒரு இறகு கூட வைக்கலாம். (One more feature in his cap).  சங்கீதத்தில் மிக ஆழமான ஈடுபாடு இருந்தால்தான் இப்படி மெனக்கட முடியும். ஸ்ரீ யஞ்ஜராமன் டிரஸ்ட் மூலமாக ஏற்பாடு செய்திருந்தார்.

மைலபூரில் இருந்தால் இது ஒரு சௌகர்யம். போன வாரம் மதுரை மணி அய்யர் அவர்களின் இதே போன்று ஒரு கச்சேரி கேட்க நேர்ந்தது. அது சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்து போன்றது என்றால், இதுவும் இன்னொரு சர்க்கரை பந்தல் இன்னொரு தேன் மழை. 

மதுரை மணி அய்யர் கச்சேரியில்  சுருட்டியின் “அங்காரகமாஸ்ரயாம்யஹமும்”, பைரவியின் “கொலுவையும்” பேகடாவின் “அனுதினமுவும்”, போறதாதிற்கு ரசிகர் விருப்பமாக “பாமாலைக்கு” என்னை வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு போக,

ஆலதூராரின் ரீதிகௌளையில் “சேரராவதேயும்”, கேதாரத்தில் “ராமா நீ பையும்”. தோடியில் “தாசுவும்” என்னை தூங்கவிடாமல் செய்தது.  முகாரியின் ‘”எந்தா நின்னே” அவர்களுடைய கிரீடத்தில் பதித்த வைரம்.
சரஸ்வதி வாக்கியக்கார டிரஸ்டின் செக்ரெடரி N V சுப்பிரமணியன் அவர்களின் “ஆலத்தூர் சகோதரர்கள்” பற்றிய பேச்சு, கச்சேரியை போல் அருமையாக இருந்தது என்பதும் உண்மை. கச்சேரி முடிந்தவுடன் இவர் பேசியதால், ஆலத்தூர் சகோதரர்களின் “சங்கீத பாரம்பர்யத்தை, அதன் வீச்சை” புரிந்து கொள்ள முடிந்தது.

இது போன்ற கச்சேரிகளில் ஒரு சௌகர்யம் உண்டு.  வேண்டாத வயலினை cut பண்ணிவிடலாம். தனி ஆவர்த்தனம் வேண்டாம். போறும் என்றால் நிறுத்தி விடலாம். பல வித கச்சேரிகளில் இருந்து best kritis எடுத்துப் போடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக பாடியாவர்களுக்கு“பணம்”தரவேண்டாம்.

இந்த சகோதரர்களைப் பற்றி சில விஷயங்களை சொல்லியே அக வேண்டும். திருவையாறு தியாகராஜ ஆராதனை யில் 192எட்டில் ஆரம்பித்த அவர்களுடைய இசைப்பயணம் 1939 ல் MUSIC அகாடெமியில் வளர்ந்து பல வித பரிமாணங்களைத் தொட்டது.

1964- மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருது சுப்பையருக்கு கொடுக்க வந்தபோது, சுப்பையர் அதை வாங்க மறுத்ததோடு ஸ்ரீ நிவாச அய்யருக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும் ஏன்று நிர்பந்தித்தார். அந்த காலத்தில் சகோதரர்களுக்கு சங்கீத கலாநிதி கொடுக்கும் வழக்கம் இல்லை என்பதால் இந்த பிரச்னை. சுப்பையர் மேலும், அப்படி இல்லை என்றால் அடுத்த வருடம் இன்னொருவருக்கு கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.  ஸ்ரீனிவாச அய்யர் வயதில் பெரியவர் என்பதால் அவருக்கு முதலில் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய, அதை ஸ்ரீ நிவாச அய்யர், சுப்பையருக்குத்தான் முதலில் கிடைக்க வேண்டும் என்று அடம் பிடித்து வாங்க மறுத்தார்.  சுப்பையரின் தந்தை வெங்கடேச அய்யர் படத்தின் முன் சீட்டு குலுக்கி போட்டதில் சுப்பையரின் பெயர் வந்தது. அடுத்த வருடம் ஸ்ரீனிவாச அய்யருக்கு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவாதத்துடன்.  (தேங்க்ஸ் டு தஞ்சாவூரான் இன் ரசிகாஸ்.org)

ஆடுத்த வருடம் ஸ்ரீனிவாச யாருக்கு கொடுக்கும் போது, சுப்பையர் உயிருடன் இல்லை.என்பது உண்மையான சங்கீத சோகம்.

என்னுடைய தந்தையாருடன்.ஆலத்தூர் சகோதரரகளைப் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது.  என் தந்தை மதுரை சோமுவின் பரம ரசிகர். இருந்தாலும் அவர் அந்த காலத்து வித்வான்களிடம் வைத்து இருந்த மரியாதை மிகவும் உசத்தியானது. அவர் சொலும்போது அந்தக்காலத்தில் தனித் தனியாக ரசிகர்கள் இருந்தார்கள்.  சோமுவுக்கு என்று ஒரு கூட்டம். GNB க்கு என்று ஒரு கூட்டம். அதே போல் ஆலத்தூர் சகோதரர்களுக்கு என்று ஒரு கூட்டம் இருந்தது  ஒவ்வொரு கூடத்திலும் இருப்பவர்கள் அசகாய சூரர்களாக இருப்பார்கள்.  அந்த கச்சேரியை அக்குவேறு ஆணி வேறு என்று விமர்சனம் செய்வதில் சமர்த்தர்கள்.

Interestingly,  Srinivasa Iyer’s son, Mr.S.Thyagarajan was working as Principal of National College, Trichy where my father worked as Vice Principal.   Both of them are thick friends even now. 
என்னுடைய தந்தை எஸ். தியாகராஜன் அவர்களைப் பற்றிச் சொல்லும்போது, அவர் சொன்னதாகச் சொல்லுவார் “எனக்கு பாட்டு வராததிற்கு காரணம் என்னுடைய தந்தை சிஷ்ய பரம்பரையை வளர்க்காதது தான்.” என்றார்.  திருச்சியில் இருந்த மிகப் பெரிய தந்தையின் வீட்டை குடும்பச் சந்தையில் பிரிக்க நேர்ந்ததை நினைத்து இன்றும் வருதப்பட்டுக்கொண்டிருக்கிறார்”. என்பதும் ஒரு சோகம்.
என் வீ சுப்ரமணியம் அவர்களின் பேச்சின் சில பகுதிகளைக் கேட்டாலே ஆலத்தூர் சகோதர்களைப் பற்றி பல விஷயங்களை புரிந்து கொள்ள முடியும் அதனால், முதலில் இதைப் பாப்போம்..
-     
      19th Century யில் கர்னாடக சங்கீதம் ஒரு தனி விதமாக இருந்தது. அப்போது ராகம் தானம் பல்லவி தான் பிரதானம். தியாகராஜ கீர்த்தனைகள் துக்கடாவாக பாடப்பட்டன.  வர்ணம், ராகம் தானம் பல்லவி தான் முக்கியமாக இருந்தது.

-        20th century யில் தான் கீர்த்தனைகளுக்கு மதிப்பு கொடுத்து பாடத்தொடங்கிய காலம்.  So, composition music started only in 20th century beginning, and 19th century end. அதனால் கீர்த்தனைகளை பிரதானமாக பாடுவதற்கு சில எதிர்ப்புகள் கூட இருந்தது.  மேலும் இந்த கீர்த்தனைகளை ஸ்வரப்படுத்தி ஒரு கச்சேரிக்கு வாகாக கொண்டு வருவது என்பதும் ஒரு CHALLENGE என்றே சொல்லலாம்.  அதற்கு முக்கிய பங்கு வகித்தவர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் (ARi).
-     
அதன் பிறகு பட்டமாள் ஸ்கூல் என்று ஒன்று உருவாயிற்று.  பட்டம்மாள் ஸ்கூல் என்றால் authentic. அப்போது எந்த ஒரு கீர்த்தனையும் முறையாக பாடாந்திரம் செய்ய வேண்டும் என்றால் பட்டம்மாள் ஸ்கூல் தான் முன்னோடியாக் இருந்தது. அதனால் பாடாந்திரம் மிக முக்கியம் என கருதப்பட்ட காலம். 

ஆலத்தூர் சகோதரர்கள் அவ்வாறாக பாடாந்திர சுத்தம் personified.

Excellence in singing, innovative outpour are two different factors of a singing pattern.
Alathur brothers music is excellence in singing wherein GNB’s singing is innovative outpour.  

இவர்களின் சங்கீதத்தில் ஒரு உண்மை இருக்கும். frankness. சங்கீதத்திற்கு, அந்த மேடைக்கு அவர்கள் கொடுத்த மரியாதை அலாதியானது.  ரசிகர்களுக்காக அவர்களுடைய ரசனைக்காக தன்னுடைய மேடை தர்மத்தை அவர்கள் விலை பேசியதில்லை.

Alathur பாணி became a Standard reference like pattammal school and so, they were double careful as to maintain the பாணி and not to truncate the kriti and bring the full “bhAvam” of the kriti.  They were particular not to face the wrath of Thyagaraja by singing it improperly.

அவர்களுடைய கச்சேரியை கேட்டு முடித்து வெளியில் வரும்போது முழு திருப்தியுடன் வரலாம்
-    
     மறி மறி நின்னே- காம்போதியில் தியாகராஜ கிருதி இவர் பாடாந்தரம் போல் எங்கும் கிடையாது.  ஆணித்தரமான ஒரு உண்மை.

-   ஜாம்பவான்களான GNB, MADURAI MANI IYER, ARI, FLUTE MALI இருந்த காலத்தில் இவர்கள் ENTRY ஆனதால் தனக்கென்று ஒரு இடம் பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

- 
b இரட்டையர்கள் பாடுவது அந்தக்காலத்தில் புதிது என்பதால்.இந்த பரீக்க்ஷார்த்த முயற்சியில் பல வித சோதனைகளை சந்திக்க வேண்டி இருந்தது.

- பழனி சுப்ரமணியம் பிள்ளையுடன் ஆலத்தூர் சகோதரர்கள் செயத கச்சேரிகள் மிகவும் உசத்தியானது.  Unobstrusive playing.  Later on  Sri.Vellore Ramabhadran.

-         பல்லவி பாடும் திறமை, திருப்புகழில் அவர்களுக்கு இருந்த ஒரு பற்று.
திருப்புகழை தனியாக ஒரு கச்ச்ரியாக நான்கு மணி நேரத்திற்கு பாடி இருக்கிறாகள். திருப்புகழின் சந்ததம் பிசகாமல் மாறாமல் அடுமையாக பாடுவதி வல்லவர்கள்.

சீரியஸ் மியூசிக் கேட்க வேண்டுமென்றால் பட்டம்மாள் ஸ்கூல் அல்லது ஆலத்தூர் ஸ்கூல்.என்று அந்தக் காலத்தில் வரையறுக்கப் பட்டிருந்தது.

மீண்டும் இப்படி ஒரு அருமையான கச்சேரியை கேட்ட்டதற்கு கேட்கவைத்ததிற்கு எஸ். எல்.நரசிம்ஹானுக்கு ஒரு –oh- போடலாம்

No comments: